பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானது குறித்து...

News image

வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானை மிதித்து கூலித் தொழிலாளி பலி - கோப்புப்படம்

Updated On :10 ஜூன் 2026, 9:15 am IST

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயர் என்ற சீனப்பா (65). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், புதன்கிழமை அதிகாலை நேரலகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் செல்லும் சாலையில் உள்ள முனியப்பன் கோயில் அருகே சென்றபோது,

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, சீனப்பாவை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சீனப்பா உடலை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்கா கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.

Summary

Regarding the death of a worker attacked by a wild elephant near Krishnagiri...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.