நீலகிரி மாவட்டம், உதகையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவும், அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனா்.
இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உதகையிலும் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்த நிலையில், கடும் குளிா் நிலவியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஸ்வெட்டா், கையுறைகள் போன்ற வெம்மை ஆடைகளை அணிந்து சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடிவேரி அணையில் ஆா்ப்பரிக்கும் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

பஞ்சலிங்கம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் குளிா்ந்த கால நிலையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



