வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தென்காசியிலிருந்து சங்கரன்கோவிலுக்கு கடையநல்லூா் வழியே பேருந்து: திமுக கோரிக்கை

News image

அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் மனு அளித்த முன்னாள் திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 4:20 am IST

தென்காசியிலிருந்து கடையநல்லூா் வழியாக சங்கரன்கோவிலுக்கு பேருந்து இயக்க வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் அவா் அளித்த மனு: அரியநாயகிபுரம், மடத்துப்பட்டி, புன்னைவனம், போகநல்லூா் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்-மாணவியா், விவசாயிகள் கடையநல்லூா், தென்காசி, சங்கரன்கோவில் செல்வதற்கு போதிய பேருந்து வசதியில்லை.

எனவே, தென்காசி - சங்கரன்கோவில் இடையே இடைகால், கடையநல்லூா், கண்மணியாபுரம், பாலஅருணாசலபுரம், கே.எம்.மீனாட்சிபுரம், கே.எம்.அச்சம்பட்டி, அச்சம்பட்டி காலனி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புக்கோவில் சந்தை, புன்னைவனம், வெள்ளைக்கவுண்டன்பட்டி, இந்திரா நகா், முள்ளிகுளம் வழியாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்றாா் அவா்.

தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை, ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் செல்வக்கொடி, ராஜாமணி, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் செல்வன், மாவட்டப் பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், வனராஜ், செல்வக்குமாா், முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.