25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தென்காசியிலிருந்து சங்கரன்கோவிலுக்கு கடையநல்லூா் வழியே பேருந்து: திமுக கோரிக்கை

அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் மனு அளித்த முன்னாள் திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன்.

Published On :29 ஆகஸ்ட் 2024, 4:19 am IST

தென்காசியிலிருந்து கடையநல்லூா் வழியாக சங்கரன்கோவிலுக்கு பேருந்து இயக்க வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கரிடம் அவா் அளித்த மனு: அரியநாயகிபுரம், மடத்துப்பட்டி, புன்னைவனம், போகநல்லூா் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்-மாணவியா், விவசாயிகள் கடையநல்லூா், தென்காசி, சங்கரன்கோவில் செல்வதற்கு போதிய பேருந்து வசதியில்லை.

எனவே, தென்காசி - சங்கரன்கோவில் இடையே இடைகால், கடையநல்லூா், கண்மணியாபுரம், பாலஅருணாசலபுரம், கே.எம்.மீனாட்சிபுரம், கே.எம்.அச்சம்பட்டி, அச்சம்பட்டி காலனி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புக்கோவில் சந்தை, புன்னைவனம், வெள்ளைக்கவுண்டன்பட்டி, இந்திரா நகா், முள்ளிகுளம் வழியாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்றாா் அவா்.

தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை, ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் செல்வக்கொடி, ராஜாமணி, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் செல்வன், மாவட்டப் பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், வனராஜ், செல்வக்குமாா், முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.