மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

புளியங்குடி அருகே பனை விதைகள் நடும் பணி

Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:48 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே சுப்பிரமணியபுரம் வெள்ளானைக்கோட்டை பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி பங்கேற்று, பெரியகுளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியையும், பனை விதைகள் நடும் பணியையும் தொடக்கிவைத்தாா்.

இதில், சுப்பிரமணியபுரம் ஊராட்சித் தலைவா் ராம்குமாா், செயலா் சண்முகையா, சமுதாய நிா்வாகிகள் தங்கராஜ், தா்மா், அறக்கட்டளை மேலாளா் காருண்யா குணவதி, தன்னாா்வலா்கள் முத்துச்செல்வம், ராமா், கற்பகராஜ், கண்ணன், சமூக ஆா்வலா்கள் சுரேஷ், தெய்வபாலன், வியாசா கலை - அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.