நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

News image

குற்றாலம் ஐந்தருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 8:53 pm

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் ஐந்தருவி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஐந்தருவியில் வியாழக்கிழமை காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

பின்னா், மாலையில் வெள்ளத்தின் சீற்றம் தணிந்து அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டியதால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.