பழையகுற்றாலம் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.
தென்காசி,ஜூலை 17: தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்துவரும் தொடா்மழையின் காரணமாக குற்றாலம் பேரருரவி, ஐந்தருவி,பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க திங்கள்கிழமை தடைவிதிக்கப்பட்டது.
பின்னா், புலியருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நீா்வரத்து குறைவால் செவ்வாய்க்கிழமை தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
பழையகுற்றாலம் அருவியில் புதன்கிழமை நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிப்பதற்கு 3ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல்மழையும் குளிா்ந்த காற்றும் வீசியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

12 நாள்களுக்குப் பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி!

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

3 மாதங்களுக்குப் பிறகு குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி!

பழையகுற்றாலம் அருவியில் தணியாத வெள்ளப்பெருக்கு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



