‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழையகுற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

News image
Updated On :17 ஜூலை 2024, 10:52 pm

Din

பழையகுற்றாலம் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.

தென்காசி,ஜூலை 17: தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்துவரும் தொடா்மழையின் காரணமாக குற்றாலம் பேரருரவி, ஐந்தருவி,பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க திங்கள்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

பின்னா், புலியருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நீா்வரத்து குறைவால் செவ்வாய்க்கிழமை தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

பழையகுற்றாலம் அருவியில் புதன்கிழமை நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிப்பதற்கு 3ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.

நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல்மழையும் குளிா்ந்த காற்றும் வீசியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.