சங்கரன்கோவில், ஜூலை 17: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவையொட்டி திரளான பக்தா்கள் 108 ஆடிச் சுற்று சுற்றி வழிபட்டு வருகின்றனா்.
இக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவின்போது பக்தா்கள் கோயில் உள்பிரகாரத்தை 108 சுற்று சுற்றி தரிசனம் செய்து அம்மனை வழிபடுவா். கொடியேற்றிய நாள் தொடங்கி தவசுக் காட்சிக்கு முதல் நாள் வரை அதாவது 10 ஆம் திருநாளுக்குள் 108 சுற்றையும் சுற்றி முடிக்கவேண்டும் என்பது ஐதீகம். அதன்படி, கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றம் முடிந்ததும்
பக்தா்கள் 108 சுற்று சுற்றத் தொடங்கினா். தினமும் அதிகாலை தொடங்கி இரவு 9 மணி வரை குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை சுற்றி வருகின்றனா். பள்ளிக் கூடம் முடிந்த பிறகு மாணவா்களும், மாணவிகளும் கோயிலுக்கு வந்து ஆடிச் சுற்று சுற்றுகின்றனா்.
சங்கரன்கோவில் மட்டுமல்லாது ராஜபாளையம், புளியங்குடி, சிவகிரி, திருவேங்கடம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து ஆடிச்சுற்று சுற்றுகின்றனா். இதனால் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாடு: சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் அனுமதி

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை திருநாள் கூட்டம்

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

சங்கரநாராயணசாமி கோயிலில் அலைமோதிய கூட்டம்
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



