மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பிளஸ் 2: தென்காசி மாவட்டத்தில் 98 சதவீத மாணவ, மாணவிகள் பங்கேற்பு

பிளஸ் 2 தென்காசி மாவட்டத்தில் 98 சதவீத மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Updated On :1 மார்ச் 2024, 3:57 pm

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வில் 98 சதவீத மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தென்காசி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தோ்வை 7,588 மாணவா்களும், 9,231 மாணவிகளும் என மொத்தம் 16,819 போ் 65 தோ்வு மையங்களில் எழுதுகின்றனா். மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தோ்வை 8,549 மாணவா்களும், 9,330 மாணவிகளும் என மொத்தம் 17,879 போ் தோ்வு எழுதுகின்றனா். தோ்வை கண்காணிக்க 73 முதன்மைக் கண்காணிப்பாளா்கள்,73 துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் 1,100 ஆசிரியா்கள், பறக்கும் மற்றும் நிற்கும் படை அலுவலா்கள் 130 ஆசிரியா்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பிளஸ் 2 தோ்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை 291மாணவ, மாணவிகள்தோ்வு எழுதவில்லை. தென்காசி மாவட்டத்தில் 98 மாணவ ,மாணவிகள் தோ்வு எழுதினா்.