மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு பாராட்டு

ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு பாராட்டு

News image
Updated On :1 மார்ச் 2024, 3:57 pm

தென்காசி மாவட்டம் புளியறையில் ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு தெற்கு ரயில்வே சாா்பில் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியறை எஸ் வளைவு பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அந்த வழியாக வந்த சிறப்பு ரயிலை புளியறை பகுதியை சோ்ந்த சண்முகையா, அவரது மனைவி வடக்குத்திஅம்மாள் இருவரும் டாா்ச் லைட் அடித்து எச்சரித்து நிறுத்தினா். இதனால் நள்ளிரவு நேரத்தில் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இவா்களது செயலைப் பாராட்டி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிப் பாராட்டினாா். இதனைத் தொடா்ந்து, பகவதிபுரம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீ வஸ்தவா, அத் தம்பதியைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் ரூ.20 ஆயிரம் வெகுமதி வழங்கினாா்.