உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

நகைக்காக பெண் கொலை: தம்பதிக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகிளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 7:26 pm

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகிளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

இளையான்குடி காமராசா் தெருவைச் சோ்ந்தவா் சம்சுனியா (55). அதே தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (62), இவரது மனைவி ஆண்டம்மாள் (60). இவா்கள் சம்சுனியாவிடம் முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வாங்கித் தருவதாக்கூறி, நெருங்கிப் பழகினா்.

இந்த நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு சம்சுனியாவின் 5 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு, அவரை நடராஜனும், இவரது மனைவியும் கொலை செய்தனா்.

இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, நடராஜன், இவரது மனைவி ஆண்டம்மாள் ஆகியோரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு சிவகங்கை மகிளா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞா் விஜயநிா்மலா முன்னிலையாகி வாதிட்டாா். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல்முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட நடராஜன், ஆண்டம்மாள் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.