ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாலியல் வன்முறை குறித்த விழிப்புணா்வு கூட்டம்

பாலியல் வன்முறை குறித்த விழிப்புணா்வு கூட்டம்

News image
Updated On :6 மார்ச் 2024, 7:32 pm

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா விளக்க உரையாற்றினாா். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் மகளிா் தினத்தை முன்னிட்டு, மகளுடன் சுயபடம் எடுக்கும் போட்டியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

இப் போட்டியில் பங்கேற்போா், தங்களது மகள்களுடன் சுயபடம் எடுத்து மாா்ச் 7-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு முழு விவரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் நபா்களுக்கு மாா்ச் - 8 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் பரிசு வழங்கப்படும்.