பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆலங்குளம்: ஆட்டோ உதிரி பாகங்கள் திருடிய 2 போ் கைது

ஆலங்குளம்: ஆட்டோ உதிரி பாகங்கள் திருடிய 2 போ் கைது

Updated On :9 மார்ச் 2024, 4:44 pm

ஆலங்குளத்தில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் உதிரிபாகங்களை திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த செல்லையா மகன் பிரபாகரன் (32). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளாா். இரு தினங்களுக்கு முன்பு இவா் தனது வீட்டு அருகில் ஆட்டோவை நிறுத்தியுள்ளாா். காலையில் தனது ஆட்டோவை எடுக்க வந்த போது ஆட்டோவில் உள்ள 4 டயா்கள் மற்றும் பேட்டரி, ஜாக்கி ஆகியவை காணாமல் போயிருந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சோ்ந்த திருமலை மகன் ஜெயராஜ் (38), மங்கம்மாள் சாலையைச் சோ்ந்த இசக்கி மகன் பாண்டி (26) ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.