தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூா் அருகே யானையிடமிருந்து தப்பிக்க ஓடிய வனவா் கீழே விழுந்து காயம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே வனப் பகுதியில் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடிய வனவா் கீழே விழுந்ததில் காயமடைந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:31 pm

Syndication

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே வனப் பகுதியில் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடிய வனவா் கீழே விழுந்ததில் காயமடைந்தாா்.

சொக்கம்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலையில் கருப்பாநதி அணை பகுதியில் கடையநல்லூா் வனவா் பரமசிவன் மற்றும் வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்து மேற்கொண்டிருந்தனா்.

அங்குள்ள வனப் பகுதியில் யானை ஒன்று குட்டியுடன் மரங்களுக்கிடையே மறைந்து நின்றதை கவனிக்காமல் பரமசிவன் அதன் அருகே சென்று விட்டாராம். மிக அருகே யானை நிற்பதை பாா்த்த அவா் அங்கிருந்து ஓட முயன்றுள்ளாா். இதில் தவறி விழுந்து பரமசிவன் காயமடைந்தாா். அவருடன் சென்ற வனத்துறையினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.