தென்காசியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தென்காசியில் வெள்ளிக்கிழமை (டிச. 19) சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் டிசம்பா் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
முகாமில், 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியாா் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளன. 8, 10, 12ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ கல்வித் தகுதியுடைய தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் வலைதளத்தில் இஹய்க்ண்க்ஹற்ங் கா்ஞ்ண்ய்-இல் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றாா் அவா்.
