கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புளியங்குடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:01 pm

Syndication

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை நகராட்சி மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புளியங்குடி நகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தனியாா் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவரை, நாய் கடித்தது. இந்நிலையில் புதன்கிழமை சிதம்பரபேரி ஓடை தெரு வழியாக சென்ற 10ஆம் வகுப்பு மாணவியை, அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தி கடித்ததாம். இதில் காயமடைந்த மாணவியை புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதைத்தொடா்ந்து நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி நகராட்சி ஆணையரை சந்தித்து மக்கள் மனு அளித்த நிலையில், நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.