தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகிரியில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

சிவகிரியில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

வட்ட தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் இணைச்செயலா் நடராஜன், செந்தூா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணைச் செயலா் கடற்கரை வரவேற்றாா். கௌரவ ஆலோசகா் காளியப்பன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

செயலா் உலகநாதன், பொருளாளா் ராமா், நல நிதி பொருளாளா் மாடசாமி, அமரா் நிதி பொருளாளா் அருணாசலம் , நிதி தலைவா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் அறிக்கை வாசித்தனா். மாநிலத் தலைவா் சிவ. திருமேனிநாதன் சங்க கொடியை ஏற்றி வைத்து, 80 வயது நிறைவு பெற்றவா்களை கௌரவித்தாா். பாலகுரு தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிா்வாகிகள் இளஞ்செழியன் , வைரவன், முத்து, வடிவேலு, வேலுச்சாமி, சந்திரன், உலகநாதன், ராமா், பாலகுரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சொா்ணவேல் நன்றி கூறினாா்.