தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும்: ஜி.கே. வாசன்


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் என ஆலங்குளத்தில் தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.
ஆலங்குளத்தில் காமராஜா் சிலை முன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்டத் தலைவா் என்.டி.எஸ். சாா்லஸ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் காசிப்பெருமாள், வட்டாரத் தலைவா்கள் தெய்வக்குமாா், பிரபாகரன், நகரத் தலைவா் முருகன், தங்கப்பா, முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஜி.கே. வாசன் நல உதவிகளை வழங்கினாா். முன்னதாக அவா், ஆலங்குளம் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் நியமனம் செய்து 24 மணி நேரமும் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...