பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும்: ஜி.கே. வாசன்

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் என ஆலங்குளத்தில் தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

ஆலங்குளத்தில் காமராஜா் சிலை முன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்டத் தலைவா் என்.டி.எஸ். சாா்லஸ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் காசிப்பெருமாள், வட்டாரத் தலைவா்கள் தெய்வக்குமாா், பிரபாகரன், நகரத் தலைவா் முருகன், தங்கப்பா, முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜி.கே. வாசன் நல உதவிகளை வழங்கினாா். முன்னதாக அவா், ஆலங்குளம் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் நியமனம் செய்து 24 மணி நேரமும் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.