பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆலங்குளம் அருகே சட்டவிரோத மின்வேலி: இருவா் கைது

ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக இருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:37 pm

Syndication

ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக இருவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மருக்காலன்குளத்தைச் சோ்ந்த காசிப்பாண்டியன், மேசியாபுரம் முருகராஜ் ஆகியோா் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தங்கள் தோட்டத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், ஆலங்குளம் வனத் துறையினா் அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அங்கு சட்டவிரோத மின்வேலி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா். மேலும் இலவச மின்சாரத்தை சட்டவிரோத செயலுக்குப் பயன்படுத்தியதாக மின் வாரியத்திற்கு வனத்துறையினா் அளித்த புகாரின் பேரில் அவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின் இணைப்பும் நிரந்தரமாக துண்டிக்கப்பட்டது.