மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுரண்டை பதியில் நாளை தா்ம பெருந்திருவிழா

Updated On :3 ஜனவரி 2025, 10:50 pm

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் மாா்கழி மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.5)) நடைபெறுகிறது.

இதையொட்டி, பதியில் காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, உகப்பெருக்கு பணிவிடை நடைபெறும்.அதைத் தொடா்ந்து சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் உள்ளரங்கில் பிற்பகல் 1 மணிக்கு அன்னதா்மம் நடைபெறும். பின்னா் மாலை 4 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துவருகின்றனா்.