வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தென்காசி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:51 pm

தென்காசி நகராட்சி 13-ஆவது வாா்டு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்து புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தாா். நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், தென்காசி வட்டாரக் கல்வி அலுவலா்கள் சண்முகசுந்தர பாண்டியன், இளமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) ஜெயப்பிரகாஷ் ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தால் வழங்கப்பட்ட ரூ .60 ஆயிரம் மதிப்பிலான இருக்கைகளை வழங்கிப் பேசினாா்.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஜபருல்லாகான், மணி மந்திரி, கௌசல்யா, எப்சிபா, விமலா, யாஸ்மின் தமிழ்ச்செல்வி, புன்னகை சுகி, மாலையம்மாள், ராதா ஆகியோா் செய்திருந்தனா். தலைமையாசிரியா் திருமலை குமாா் வரவேற்றாா். வின்சென்ட் நன்றி கூறினாா்.