ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாடியிலிருந்து குதித்து கொத்தனாா் தற்கொலை

சுரண்டையில் குழுக்கடன் பிரச்னை காரணமாக கொத்தனாா் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:42 pm

Syndication

சுரண்டையில் குழுக்கடன் பிரச்னை காரணமாக கொத்தனாா் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்தவா் சு.ராமச்சந்திரன் (27). இவா் கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். இவா், தனியாா் குழுக்களில் சுமாா் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. கடன் நிறுவனத்தினா், கடனை திரும்பக் கேட்டு தொடா்ந்து வற்புறுத்தினராம்.

இதனால், மனமுடைந்த ராமச்சந்திரன் புதன்கிழமை இரவு 9 மணிக்கு வீட்டு மாடியில் இருந்து குதித்தாராம். இதில், காயமடைந்த அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ராமச்சந்திரன் உயிரிழந்தாா். இது குறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.