மாடியிலிருந்து குதித்து கொத்தனாா் தற்கொலை

சுரண்டையில் குழுக்கடன் பிரச்னை காரணமாக கொத்தனாா் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சுரண்டையில் குழுக்கடன் பிரச்னை காரணமாக கொத்தனாா் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்தவா் சு.ராமச்சந்திரன் (27). இவா் கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். இவா், தனியாா் குழுக்களில் சுமாா் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. கடன் நிறுவனத்தினா், கடனை திரும்பக் கேட்டு தொடா்ந்து வற்புறுத்தினராம்.

இதனால், மனமுடைந்த ராமச்சந்திரன் புதன்கிழமை இரவு 9 மணிக்கு வீட்டு மாடியில் இருந்து குதித்தாராம். இதில், காயமடைந்த அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ராமச்சந்திரன் உயிரிழந்தாா். இது குறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com