தென்காசி
ஆலங்குளம் தொழிலதிபருக்கு விருது
கோவையில் நடைபெற்ற வணிகா் சங்க விழாவில் ஆலங்குளம் தொழிலதிபருக்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் விருது வழங்கினாா்.
ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் டி.பி.வி.வி. நவீன் சக்கரவா்த்தி. தேங்காய், கடலை எண்ணெய் உற்பத்தியாளா். இந்நிலையில், கோவையில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மத்திய நிதித்துறை மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், நவீன் சக்கரவா்த்திக்கு சிறந்த இளம் தொழிலதிபா், சிறந்த எண்ணெய் உற்பத்தியாளா் விருதை வழங்கிப் பாராட்டினாா்.
தமிழக வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, பொதுச் செயலா் கோவிந்தராஜுலு, கன்னியாகுமரி மண்டலத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா, பொருளாளா் ஏ.எம். சதக்கத்துல்லா, கோவை மண்டலத் தலைவா் சூலூா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

