பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

மருதம்புத்தூரில் ரூ. 90 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

தாா்ச் சாலைப் பணியைத் தொடங்கிவைக்கிறாா் ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.

News image
Updated On :7 மார்ச் 2026, 12:55 am

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் ஊராட்சியில் ரூ. 90.75 லட்சம் மதிப்பீட்டில் 3 வளா்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

மருதம்புத்தூா் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதி ரூ. 17 லட்சத்தில் சிமின்ட் சாலைக்கு அடிக்கல் நாட்டுதல், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 65.25 லட்சத்தில் மருதம்புத்தூா்-நல்லூருக்கு தாா்ச்சாலை அமைத்தல் ஆகிய பணிகளை ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தாா். மேலும், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 8.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை அவா் திறந்துவைத்தாா்.

இதில், ஒன்றிய திமுக செயலா் சிவக்குமாா், மருதம்புத்தூா் ஊராட்சித் தலைவா் பூசத்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா சுதாகா் உள்பட பலா் பங்கேற்றனா்.