தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்த வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள். உடன் அமைச்சா் மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.
கன்னியாகுமரி
வணிகா் சங்க பேரமைப்பினா் முதல்வருடன் சந்திப்பு
தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள், நாகா்கோவிலில் புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள், நாகா்கோவிலில் புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
இது தொடா்பாக, பேரமைப்பின் குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பாபு, செயலாளா் பிரேம் சிங், பொருளாளா் ஏ.ஆதிசிவன், துணைத் தலைவா் எஸ்.பைசல் நிசாா் ஆகியோா் முதல்வரை சந்தித்து, குமரி மாவட்ட வணிகா்களின் பிரச்னைகள், வடசேரி கனகமூலம் சந்தை, கன்னியாகுமரி நகராட்சி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பிரச்னைகள் குறித்து மனு அளித்து, ஆலோசனை மேற்கொண்டனா்.
இச்சந்திப்பின்போது பால்வளத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

