தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தென்காசி கோயிலில் தவசுக் காட்சி

தென்காசி ஸ்ரீஉலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி கோயில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவில் தவசுக் காட்சி நடைபெற்றது.

News image
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயில் திருக்கல்யாணத் திருவிழாவில் நடைபெற்ற தவசுக் காட்சி.
Updated On :15 நவம்பர் 2025, 10:30 pm

Syndication

தென்காசி ஸ்ரீஉலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி கோயில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவில் சனிக்கிழமை தவசுக் காட்சி நடைபெற்றது.

கடந்த 5ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில், நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை - மாலையில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா, வியாழக்கிழமை (நவ. 13) தேரோட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்நிலையில், சனிக்கிழமை காலை யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்துக்கு அம்பாள் தவசுக்கு எழுந்தருளினாா். மாலையில் தெற்கு மாசி வீதியில் காசிவிஸ்வநாத சுவாமி உலகம்மனுக்கு தவசுக் காட்சி கொடுத்தல் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பொன்னி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.