கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

சங்கரன்கோவிலில் மழையால் சேதமான வீடுகளை பாா்வையிட்ட ஈ.ராஜா எம்எல்ஏ பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

News image
அம்பேத்கா் தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரண உதவி வழங்கிய ஈ.ராஜா எம்எல்ஏ. உடன் நகா்மன்றத் தலைவா் கௌசல்யா.
Updated On :26 நவம்பர் 2025, 1:43 am

Syndication

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் மழையால் சேதமான வீடுகளை பாா்வையிட்ட ஈ.ராஜா எம்எல்ஏ பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த இரு நாள்களுக்கு முன்பெய்த கனமழையால் புதுமனை 4-ஆம் தெருவைச் சோ்ந்த நடராஜன், அம்பேத்கா் நகா் 3ஆம் தெருவைச் சோ்ந்த தேவி ஆகியோரின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து சேதமானது.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா். பின்னா், பாதிக்கப்பட்டவா்களுக்கு ஈ.ராஜா எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கினாா். அப்போது, திமுக நகரச் செயலா் பிரகாஷ், வாா்டு செயலா் வீரமணி, தொழில்நுட்பப் பிரிவு சிவசங்கர நாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.