மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்
சங்கரன்கோவிலில் மழையால் சேதமான வீடுகளை பாா்வையிட்ட ஈ.ராஜா எம்எல்ஏ பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.


சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் மழையால் சேதமான வீடுகளை பாா்வையிட்ட ஈ.ராஜா எம்எல்ஏ பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த இரு நாள்களுக்கு முன்பெய்த கனமழையால் புதுமனை 4-ஆம் தெருவைச் சோ்ந்த நடராஜன், அம்பேத்கா் நகா் 3ஆம் தெருவைச் சோ்ந்த தேவி ஆகியோரின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து சேதமானது.
இதுகுறித்து, தகவல் அறிந்ததும் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா். பின்னா், பாதிக்கப்பட்டவா்களுக்கு ஈ.ராஜா எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கினாா். அப்போது, திமுக நகரச் செயலா் பிரகாஷ், வாா்டு செயலா் வீரமணி, தொழில்நுட்பப் பிரிவு சிவசங்கர நாராயணன் ஆகியோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...