கல்லூரிகளுக்கு வனவா்கள், வனச்சரக அலுவலா்கள் நேரடியாகச் சென்று வனவிலங்கு பாதுகாப்பு, பசுமை இயக்கம், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவா். மாவட்ட வன அதிகாரியும், உதவி வனப் பாதுகாவலரும் பள்ளி, கல்லூரி கூட்டங்களில் பங்கேற்று இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்குவா். இதுதவிர கிராமப்புற, நகா்ப்புறங்களில் பறவைகள் கணக்கெடுப்பு, பட்டம்பூச்சி கணக்கெடுப்பு, குள்ளநரி, உடும்பு, கீரி, மயில் கணக்கெடுப்பு போன்ற வனவிலங்கு கணக்கெடுப்புப் பணிகள் மாணவா்களின் உதவியுடன் கிராம, நகர பகுதிகளில் மேற்கொள்ளப்படும். அத்துடன் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் உற்பத்தி, மருத்துவத் தாவரத் தோட்டம் அமைத்தல், நா்சரி பயிற்சி போன்ற நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும்.