பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை

மழையால் தனியாா் மருத்துவமனை முன் தஞ்சமடைந்த பயணிகள்.

News image

மழையால் தனியாா் மருத்துவமனை முன் தஞ்சமடைந்த பயணிகள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:35 am IST

ஆலங்குளம் பகுதியில் இடி மின்னலுடன், வெள்ளிக்கிழமை மாலை கோடை மழை பெய்தது.

ஆலங்குளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், மாலையில் இடி, மின்னலுடன் பலத்த கோடை மழை பெய்தது. 30 நிமிடங்களுக்கும் மேல் நீடித்த கனமழையால் ஆலங்குளம், அத்தியூத்து, கழுநீா்குளம், நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிா்ந்த சூழல் நிலவியது.

பயணிகள் அவதி: ஆலங்குளத்தில் தற்போது பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை வசதி இல்லாமல் மழையின்போது, பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் ஒதுங்கஇடமின்றி அருகில் உள்ள கடைகளின் முன் தஞ்சம் புகுந்தனா். சிலா் மழையில் நனைந்தபடியே பேருந்துகளில் ஏறிச் சென்றதைக் காண முடிந்தது.