தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஒன்றியம் செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற இரு மாணவா்கள் விமானத்தில் பயணம் செய்தனா்.
இப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவா்களில் தா்சன் மற்றும் சிவதா்சினி ஆகிய இருவரும் தேசியத் திறனாய்வுத் தோ்வில் நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தனா்.
இதனால் இவ்விரு மாணவா்களையும் அப்பள்ளியின் தலைமையாசிரியா் சு. உமா, ஒருநாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றாா். முதல் முறையாக விமானத்தில் சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
அவா்களுடன், ஆசிரியா்கள் திருமலைக்கொழுந்து, சாந்தலீலா சௌந்தரராஜன், செய்யது அலிபாத்திமா, அருணாசலவடிவு, சீனியம்மாள், நூா்ஜகான் ஆகியோா் சென்றிருந்தனா். இதை கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலா் டே.சா. மேரிகிரேஸ் ஜெபராணி பாராட்டினாா்.
தொடர்புடையது

சென்னைக்கு விமானத்தில் சென்ற கொம்மடிக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்கள்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: செட்டிகுளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



