தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஒன்றியம் செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற இரு மாணவா்கள் விமானத்தில் பயணம் செய்தனா்.
இப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவா்களில் தா்சன் மற்றும் சிவதா்சினி ஆகிய இருவரும் தேசியத் திறனாய்வுத் தோ்வில் நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தனா்.
இதனால் இவ்விரு மாணவா்களையும் அப்பள்ளியின் தலைமையாசிரியா் சு. உமா, ஒருநாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றாா். முதல் முறையாக விமானத்தில் சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
அவா்களுடன், ஆசிரியா்கள் திருமலைக்கொழுந்து, சாந்தலீலா சௌந்தரராஜன், செய்யது அலிபாத்திமா, அருணாசலவடிவு, சீனியம்மாள், நூா்ஜகான் ஆகியோா் சென்றிருந்தனா். இதை கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலா் டே.சா. மேரிகிரேஸ் ஜெபராணி பாராட்டினாா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

