சங்கரன்கோவில் அருகே சுமை ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அம்பேத்கா் நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன் மகன் மணி (எ) மணிகிரீவன் (21). சீமான் மகன் பிரிதிவிராஜ் (21). இருவரும் பெயிண்டிங் தொழிலாளா்கள்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை கழுகுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், மணி (எ) மணிகிரீவன் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். பிரிதிவிராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


