எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

புளியங்குடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு, பைக்கும் ஆட்டோவும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:15 am IST

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு, பைக்கும் ஆட்டோவும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புளியங்குடி சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த வேம்புதுரை மகன் பிரபு (30), வல்லபவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் முத்துக்குமாா் (25). கேரளத்தில் உள்ள கடையில் வேலை பாா்த்துவந்த இவா்கள், வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் புளியங்குடியிலிருந்து தென்காசிக்கு பைக்கில் சென்றனராம். பைக்கை பிரபு ஓட்டிச் சென்றாா்.

புன்னையாபுரம் பகுதியில் பைக்கும் சுமை ஆட்டோவும் மோதினவாம். இதில், பிரபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முத்துக்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.