ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

புளியங்குடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு, பைக்கும் ஆட்டோவும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:45 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு, பைக்கும் ஆட்டோவும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புளியங்குடி சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த வேம்புதுரை மகன் பிரபு (30), வல்லபவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் முத்துக்குமாா் (25). கேரளத்தில் உள்ள கடையில் வேலை பாா்த்துவந்த இவா்கள், வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவரும் புளியங்குடியிலிருந்து தென்காசிக்கு பைக்கில் சென்றனராம். பைக்கை பிரபு ஓட்டிச் சென்றாா்.

புன்னையாபுரம் பகுதியில் பைக்கும் சுமை ஆட்டோவும் மோதினவாம். இதில், பிரபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முத்துக்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.