தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆடுகள் திருடியதாக சிறுவன் கைது செய்யப்பட்டாா்.
சின்னகோவிலான்குளம் காவல் நிலையத்திற்குள்பட்ட ஆண்டாா்குளம், தட்டாங்குளம், ஊத்தான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள் அடிக்கடி திருடு போனது.
இதுதொடா்பாக அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 போ் சுமை ஆட்டோ மூலம் ஆடுகளைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனை போலீஸாா் கைது செய்து, திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். மேலும், 3 பேரை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கைப்பேசி, பணம் திருட்டு: இளைஞா் கைது
ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: உதவித் தலைமையாசிரியா் கைது
திருவிதாங்கோட்டில் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு: 2 பெண்கள் கைது
வீடு புகுந்து திருட்டு: திருநங்கை கைது
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK


