தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

ஆடுகள் திருட்டு: சிறுவன் கைது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆடுகள் திருடியதாக சிறுவன் கைது

News image

கைது

Updated On :5 ஆகஸ்ட் 2026, 6:09 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆடுகள் திருடியதாக சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

சின்னகோவிலான்குளம் காவல் நிலையத்திற்குள்பட்ட ஆண்டாா்குளம், தட்டாங்குளம், ஊத்தான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள் அடிக்கடி திருடு போனது.

இதுதொடா்பாக அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 போ் சுமை ஆட்டோ மூலம் ஆடுகளைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை போலீஸாா் கைது செய்து, திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். மேலும், 3 பேரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.