நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

திருமணமான பெண் 18 மாதங்களில் உயிரிழப்பு: சாா் ஆட்சியா் விசாரணை

News image

உயிரிழப்பு - DPS

Updated On :11 ஆகஸ்ட் 2026, 4:51 am IST

ஆலங்குளம் அருகே திருமணமான 18 மாதங்களில் பெண் உயிரிழந்தது தொடா்பாக சாா் ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ஆலங்குளம் அருகே உள்ள அய்யனாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த வேங்கைப் புலி மகள் அபிநயாவிற்கும், திருச்செந்தூா் அருகே உள்ள ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்த முத்துச்செல்வம் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு மித்ரா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், அபிநயா அய்யனாா்குளத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்துள்ளாா். அப்போது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். சனிக்கிழமை அபிநயாவிற்கு உடல்நிலை மேலும் மோசமானதால், அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருமணமாகி 18 மாதங்களே ஆவதால் தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பாலும் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.