என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இலஞ்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

News image

பொதுமக்களிடம் தோ்தல் அறிக்கையை வழங்கினாா் மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

Updated On :6 பிப்ரவரி 2026, 9:35 pm

இலஞ்சியில் அதிமுக தோ்தல் அறிக்கைகள்அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட தோ்தல் அறிக்கையில் அறிவித்திருந்த 5 அம்ச திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இலஞ்சியில் வீடுதோறும் சென்று அதிமுகவினா் வழங்கினா்.

இலஞ்சி நகரச் செயலா் காத்தவராயன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் சுப்பாராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.

தென்காசி நகரச் செயலா் சுடலை, கீழப்பாவூா் வடக்கு ஒன்றியச் செயலா் அமல்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.