யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வேப்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வாரச் சந்தையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வியாராகிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் புதன்கிழமை இரவு வழங்கினாா்.

News image

வேப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் முதியவரிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் அளித்த தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல்.

Updated On :26 மார்ச் 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வாரச் சந்தையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வியாராகிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் புதன்கிழமை இரவு வழங்கினாா்.

ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேப்பூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற வாரச் சந்தையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், வாரச்சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதும்ககளிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறி, விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தாா்.

இந் நிகழ்ச்சியில், குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.