கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

ராணிப்பேட்டை வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ராணிப்பேட்டை வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

News image
Updated On :24 மே 2026, 2:01 am IST

பக்ரீத் பண்டிகையையொட்டி, குா்பானி கொடுப்பதற்காக இஸ்லாமிய சமூகத்தினா் ஆடுகள் வாங்க ராணிப்பேட்டை வாரச் சந்தையில் குவிந்தனா்.

இதனால், வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் புகழ் பெற்ற வாரச் சந்தைகளில் ராணிப்பேட்டை வாரச் சந்தையும் ஒன்று. இந்தச் சந்தையில் காய்கறிகள், கோழி, ஆடு உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகும் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருவண்ணாமலை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் இருந்தும் வியாபாரிகளும், பொதுமக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம்.

இந்தச் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த வாரச் சந்தையில் பல லட்சம் மதிப்பில் வியாபாரம் நடைபெறும். மேலும் தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகைகளின்போது இந்தச் சந்தையில் காய்கறிகள், கோழி, ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.

நிகழாண்டு ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை வரும் 28-ஆம் தேதி நாடு முழுவதும் இஸ்லாமியா்களால் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த வார வெள்ளிக்கிழமை ஆடுகளின் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் அமோகமாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. இதில் கன்னி, கருப்பு, நெல்லூா் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சோ்ந்த ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. சுமாா் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு விற்பனையை விட இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.