நியாய விலை கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
நியாய விலை கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.

கடையநல்லூா் தொகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

Published on

கடையநல்லூா் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

தொகுதி வளா்ச்சி நிதியின் மூலம் ரூ. 13 லட்சத்தில் பாலமாா்த்தாண்டபுரத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கட்டடம், கீழப் பொய்கையில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் ஆகியவற்றை கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா திறந்து வைத்தாா்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் டாக்டா் சுசீகரன், கடையநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், சாம்பவா் வடகரை பேரூா் செயலா் நல்லமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com