தென்காசி
சிவகிரியில் 170 போ் கைது
மத்திய அரசை கண்டித்து சிவகிரியில் மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 25 பெண்கள் உள்பட 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக சிவகிரி சென்ட்ரல் வங்கி அருகே மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் சுப்பையா தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் வன்னியபெருமாள், ஈஸ்வரன், காளிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து தென்காசி- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 170 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

