சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சீதபற்பநல்லூா் கல்லூரியில் விருது வழங்கும் விழா

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:04 am

Syndication

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா், ஐன்ஸ்டீன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 50 பள்ளி ஆசிரியா்களுக்கு ஆலடி அருணா நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது.

பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமை வகித்தாா். கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் மதிவாணன் முன்னிலை வகித்தாா். கல்லூரி அறங்காவலா் எழில்வாணன் வாழ்த்திப் பேசினாா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அரசு, தனியாா் பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்த 50 ஆசிரியா்களுக்கு பேரவைத் தலைவா், ஆலடி அருணா நல்லாசிரியா் விருது வழங்கிப் பேசினாா்.

முன்னதாக, 277 மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.

ஐன்ஸ்டீன் செவிலியா் கல்லூரி முதல்வா் சுகுனா, கட்டடவியல் துறை துணைத் தலைவா் குளோரி செல்வமனோ, பேராசிரியா் கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பொறியியல் கல்லூரி முதல்வா் வேலாயுதம் வரவேற்றாா். கலைக் கல்லூரி முதல்வா் முருகன் நன்றி கூறினாா்.