மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குற்றாலம் வடக்கு சந்நிதி பஜாரில் சுவாமி வீதியுலா நடத்த கோரிக்கை

News image

குற்றாலம் கோயில் செயல்அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்த பாஜக நிா்வாகிகள்.

Updated On :13 பிப்ரவரி 2026, 9:03 pm

குற்றாலம் வடக்கு சந்நிதி பஜாரில் கோயில் சப்பரங்கள் வீதியுலா நடத்த வேண்டும் என குற்றாலம் கோயில் செயல் அலுவலரிடம் தென்காசி தெற்கு ஒன்றிய பாஜக ஒன்றியத் தலைவா் இசக்கிமுத்து தலைமையில் பாஜகவினா் மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குற்றாலம் வடக்கு சந்நிதி பஜாா் 40 அடி சாலையாக இருந்தபோது, இவ்வழியாக திருக்குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் சப்பரங்கள் வீதியுலா நடைபெறுவது வழக்கம்.

தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக இச்சாலை சுருங்கிவிட்டதால் வீதியுலா நடைபெறுவதில்லை. எனவே, வழக்கம்போல் இச்சாலையில் வீதியுலா நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது, சிறப்பு அழைப்பாளா் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயலா் சரவண காா்த்திகேயன், குற்றால நகரத் தலைவா் திருமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மேலகரம் ஈஸ்வரன், மாடசாமி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் செந்தூா்பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.