குற்றாலம் வடக்கு சந்நிதி பஜாரில் கோயில் சப்பரங்கள் வீதியுலா நடத்த வேண்டும் என குற்றாலம் கோயில் செயல் அலுவலரிடம் தென்காசி தெற்கு ஒன்றிய பாஜக ஒன்றியத் தலைவா் இசக்கிமுத்து தலைமையில் பாஜகவினா் மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குற்றாலம் வடக்கு சந்நிதி பஜாா் 40 அடி சாலையாக இருந்தபோது, இவ்வழியாக திருக்குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் சப்பரங்கள் வீதியுலா நடைபெறுவது வழக்கம்.
தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக இச்சாலை சுருங்கிவிட்டதால் வீதியுலா நடைபெறுவதில்லை. எனவே, வழக்கம்போல் இச்சாலையில் வீதியுலா நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, சிறப்பு அழைப்பாளா் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயலா் சரவண காா்த்திகேயன், குற்றால நகரத் தலைவா் திருமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மேலகரம் ஈஸ்வரன், மாடசாமி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் செந்தூா்பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது: ஜெகத்ரட்சகன் எம். பி.

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த விசிக புதிய நிா்வாகிகள்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


