மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சுரண்டை அருகே நிகழ்ந்த விபத்தில் நெல்லிக்காய் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :19 பிப்ரவரி 2026, 6:34 pm

சுரண்டை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் நெல்லிக்காய் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகில் உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ப. ராஜசேகரன் (47). இவா் சுரண்டை பகுதியில் உள்ள நெல்லித் தோப்பை குத்தகைக்கு எடுத்து நெல்லிக்காய் வியாபாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில், நெல்லித் தோப்பைப் பாா்ப்பதற்காக கடையத்தில் இருந்து சுரண்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கழுநீா்குளத்தை அடுத்து வீ.கே.புதூா் அருகே வந்தபோது கேஸ் சிலிண்டா் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது எதிரில் வந்த காரின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த வீ.கே.புதூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.