விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆலங்குளம் அருகே குட்கா விற்பனை: இருவா் கைது

ஆலங்குளம் அருகே கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:41 pm

Syndication

ஆலங்குளம் அருகே கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சானைச் சோ்ந்த டேவிட் அலெக்ஸாண்டா் மகன் அந்தோணி செல்வராஜ்(43). அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் இவா் கடையில் குட்கா விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான காவலா்கள் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது 6 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், குட்கா விநியோகம் செய்தது ராம்நகரில் துரித உணவகம் நடத்தி வரும் அழகு மகன் சபரிநாதன்(28) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.