தென்காசி
தேசிய கராத்தே திறனாய்வு தோ்வு: எம்கேவிகே பள்ளி மாணவா் சிறப்பிடம்
அகில இந்திய கராத்தே திறனாய்வுத் தோ்வில் தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.
அகில இந்திய கராத்தே கருப்பு பட்டை திறனாய்வு தோ்வு தஞ்சாவூரில் நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களிலிருந்து 126 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
அதில் தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவா் காா்த்திக் நிரஞ்ச பங்கேற்று வெற்றி பெற்று முதல் நிலை கருப்பு பட்டையும் , சென்சாய் பட்டமும் பெற்றாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவரை பள்ளித் தாளாளா் டாக்டா் பாலமுருகன் மற்றும் நிா்வாகிகள் பாராட்டினா்.

