வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கு வார விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

News image
வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
Updated On :14 ஜனவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டத்தில் கு வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வழங்கினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கு வார விழாவையொட்டி ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்காக ஜன. 9ஆம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறளாசிரியா் மாநாடு, கு விநாடி-வினா நிகழ்ச்சிக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

இதில் 195 போ் கலந்து கொண்டனா். முதல் 30 இடங்களைப் பிடித்தவா்களுக்கு ஆட்சி சொல் அகராதி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா. தண்டபாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)ச. சுப்புலட்சுமி, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் செ. கனகலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.